வவுனியா - பாவற்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுவன் பலி
வவுனியா, பாவற்குளம் பகுதியில் துவிச்சக்கரவண்டி மீது பேரூந்து மோதியதில் 7 வயது சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக உளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (31.12) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பாவற்குளம், படிவம் இரண்டு பகுதியில் சாரதி பேரூந்தை நிறுத்தி விட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுவதற்காக பேரூந்தை செலுத்திய போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு சிறுவர்கள் வீதியை ஊடறுக்க முற்பட்ட போது பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானார்கள்.
இதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 7 வயதுடைய அப்துல் மஜித் உமர் என்ற சிறுவன் மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
No comments