Breaking News

வவுனியாவில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வாகனம் மடக்கி பிடிப்பு - இருவர் கைது

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4ம் கட்டை பகுதியில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வாகனம் ஒன்றினை கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே.திவுல்வெவ அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது குறித்த பகுதியில் பயணித்த பட்டா ரக வாகனத்தினை சோதனைக்குட்படுத்திய போது கொள்கலன்களில் 128 கிலோ மாட்டிறைச்சியினை முறையற்ற முறையில் கொண்டு சென்றமை கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வாகனத்தினை பொலிஸார் கையப்படுத்தியதுடன், வாகனத்தின் சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் கையப்படுத்தப்பட்ட 128 கிலோ மாட்டிறைச்சி உட்பட பட்டா ரக வாகனம் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய மேலதிக நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர். 

No comments