Breaking News

யோஷித ராஜபக்சவிற்கு பிணை - வெளிநாடு செல்ல தடை

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய போதே மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, சந்தேக நபரை தலா 50 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

வெளிநாடு செல்வதற்கு தடை

மேலும் சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபரை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காவல்துறை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்ட நீதவான், சாட்சிகளுக்கு அழுத்தம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதி தனது முடிவை அறிவிக்கும் போது, ​​சந்தேக நபரை மேலும் விளக்கமறியலில் வைக்க போதுமான மற்றும் திருப்திகரமான ஆதாரங்களை அரச தரப்பு சமர்ப்பிக்கத் தவறியதால், பிணைச் சட்டத்தின் விதிகளின்படி பிணையில் விடுவிக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments