Breaking News

மாவையின் இறுதிச் சடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானது

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த  இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் மாவை சேனாதிராசாவின் இறுதிச்சடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுகிழமை(02/02/2025, ) பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.     

மறைந்த மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல், அரசடி வீதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழையிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

No comments