Breaking News

ஓமந்தையில் தடம் புரண்ட புகையிரதம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இன்று மாலை 2.15 மணியளவில் புறப்பட்ட புகையிரதம் ஓமந்தை பகுதியில் சுமார் 4:30 மணியளவில் தடம் புரண்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த கடுகதி புகையிரதம் ஓமந்தை பகுதியில் சென்றுகொண்டிருக்கையில் கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதம் வருகை தந்து கொண்டு இருந்ததன் காரணமாக அடுத்த தடத்துக்கு மாற்றியபோதே  இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இரண்டு புகையிரத பெட்டிகள் வழித்தடத்திலிருந்து கீழ இறங்கியுள்ளதுடன் தண்டவாளத்திற்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு நோக்கி செல்ல இருந்த பயணிகளை கொழும்பிலிருந்து யாழ்நோக்கி வந்த புகையிரதத்தில் ஏற்றி மீண்டும் அவர்களை கொழும்பு நோக்கி கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகளை புகையிரத திணைக்களம் மேற்கொண்டிருந்ததுடன் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்த பயணிகளை பேருந்துகளில் செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments