Breaking News

மது போதையில் வர்த்தக நிலையத்தில் அட்டகாசம் புரிந்த மதகுரு: வவுனியா பொலிசாரால் கைது

மது போதையில் வர்த்தக நிலையத்தில் அட்டகாசம் புரிந்த மதகுரு: வவுனியா பொலிசாரால் கைது

வவுனியா, புகையிரத வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் மது போதையில் அட்டகாசம் செய்த மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (30.01) தெரிவித்தனர்.

வவுனியா, புகையிரத நிலைய வீதியில் மது போதையில் நேற்று இரவு 9.30 மணியளவில் சென்ற இந்து மதகுரு ஒருவர் அப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் கொத்து ரொட்டி போடும் கூட்டு கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதுடன், அருகில் இருந்த தொலைகாட்சி திருத்துமிடத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பழைய தொலைக் காட்சி பெட்டிகளையும் சேதப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் வீதியில் சென்றோர் குறித்த மதகுருவை மடக்கிப்பிடித்து வைத்திருந்ததுடன் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த மதகுருவை கைது செய்ததுடன், வவுனியா பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின் இன்று (30.01) பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். 

No comments