வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு
நேற்றைய தினம் மரக்காரம்பளை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக மரங்களை ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனத்தை நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திவுல்வெவ தலைமையிலான போக்குவரத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் மதிப்பிலான 72 அரியப்பட்ட மரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் மரக்கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப் ரக வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சாரதியையும் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்படுவருவதுடன் இன்றையதினம் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments