வவுனியாவில் ஔவையாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு
ஒளவையாரின் நினைவு தினமானது வவுனியா, சின்னப்புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையாரின் சிலையடியில் இன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது ஔவையாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செய்யப்பட்டிருந்ததுடன் தமிழ்மணி அகளங்கன் மற்றும் மாணவர்களால் நினைவு பேருரைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்து.
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments